வீடுகளில் பணம் வைத்து சீட்டாட்டம் – 9 பேர் கைது..!

கோவை ஆர். எஸ். புரம் சுக்கிரவார் பேட்டையில் உள்ள 2 வீடுகளில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர் எஸ் புரம் போலீசுக்கு தகவல் வந்தது .உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் நாகராஜ் ( வயது 48) ஆர் .எஸ். அருணாச்சலம் ரோட்டை சேர்ந்த குணசேகரன் (வயது 54 ) நாடார் வீதியைச் சேர்ந்த சுப்ரமணியம் (வயது 57) வடவள்ளி வெங்கடேஷ் பாபு (வயது 52) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டாட பயன்படுத்தப்பட்ட 5300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு வீட்டில் பணம் வைத்து சீட்டு சீட்டு விளையாடியதாக பாரதியார் வீதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 56) வேடப்பட்டி நடராஜ் (வயது 62) பட்டணம் புதூர் தங்கவேல் (வயது 64) செட்டி வீதி நாகராஜன்” (வயது57) ரத்தினபுரி சோமு (வயது58) ஆகியோர கைது செய்யப்பட்டனர். சீட்டாடப் பயன்படுத்தப்பட்ட ரூ 4685 பறிமுதல் செய்யப்பட்டது.