கோவை கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை..

கோவை கணபதி போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். அவரது மகன் பிரகாஷ் ( வயது 19) கோவைபுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த 6 மாதங்களாக கல்லூரிக்கு செல்லவில்லை.மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் .முன்னதாக அவர் தன் கையை பிளேடால் அறுத்துள்ளார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.