கோவை டாஸ்மாக் கடையில் தகராறு – டிரைவருக்கு பிளேடு வெட்டு..!

கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட்,பேஸ் – 2 பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 47 ) டிரைவாக வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று சிட்கோ எல்.ஐ.சி. காலனியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்து சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டை சேர்ந்த சாமி என்ற சிவகுமார் (வயது 55) என்பவருக்கும் சீனிவாசனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் சீனிவாசனை வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இவர் சத்தம் போட்டார் .அதற்குள் சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.படுகாயம் அடைந்த சீனிவாசன் சிகிச்சைக்காக மதுக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்து போத்தனூர் போலீசில் சீனிவாசன் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு சிவகுமாரை நேற்று கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.