ஒண்டிப்புதூர் ரயில்வே பாலம் அமைக்க கோரி மறியல் – 124 பேர் கைது.!!

கோவை ஒண்டிப்புதூர் ,சூர்யா நகர்,சிவலிங்கபுரம் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் அந்தப் பகுதியில் ரயில்வே பாலம் அமைக்க கோரி அதன் தலைவர் சொக்கலிங்கம், துணைச் செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது . இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 80 ஆண்கள் 44 பெண்கள் உட்பட மொத்தம் 124 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..