பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.07 கோடி வசூல்.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நேற்று நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் என்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு கோயில் பணியாளர்கள் தனியார் கல்லூரி, சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியே 7 இலட்சத்து  78 ஆயிரத்து 383 ரொக்கமும், 423 கிராம் தங்கமும், 1044 கிராம் வெள்ளியும் இருந்ததாகவும், குண்டம் திருவிழா காரணமாக கூடுதலாக உண்டியல் வசூல் அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.