சூலூர் அனுக்ரஹா மந்திர் சி.பி.எஸ்.இ தனியார் பள்ளியில் பாத பூஜை.!!

பள்ளியில் பொதுத் தேர்வினை எதிர் கொள்ளக்கூடிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் முன் தங்களின் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர் இவ்விழாவில் பள்ளித் தாளாளர் ஷோபா, பள்ளி முதல்வர் சீனிவாசன் , பள்ளியின் கல்வி இயக்குநர் உமா மகேஸ்வரி, பள்ளிஆசிரியர்கள், மாணவர் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து அவர்களின் கால்களை தொட்டு வணங்கி ஆசிர்வாதத்தை பெற்றனர். தொடர்ந்து
மாணவர்கள் அனைவரும் பள்ளி தாளாளர், முதல்வர், இயக்குநர் மற்றும் ஆசிரியர்களிடம் ஆசிபெற்றனர்.
தாளாளர் ஷோபா பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே வாழ்க்கை நெறிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.