தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கோவை வந்தார்.!!

தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால்  மதியம் 2:30 மணி விமானத்தில் கோவை வந்தார்.போலீஸ் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.தமிழ்நாடு காவல்துறை சார்பில் 63வது தமிழகத்தில் உள்ள காவல்துறை மண்டலங்களுக்கு இடையான தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலை பரிசளிப்பு விழா நடந்தது.இதில் டிஜிபி சங்கர் ஜிவால் கலந்து கொண்டார்.போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.அவரை ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி ஜெயராம், போலீஸ் ஐ.ஜி. லட்சுமி,கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.ஜி.பி பரிசுகள் வழங்கினார். பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி பவானிஸ்வரி, டிஐஜிக்கள்,எஸ்.பி.க்கள், போலீஸ் துணை கமிஷனர் பங்கேற்றனர்..