வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் சுப்பிரமணியன்…

திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்பு அடைந்த திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் வெள்ள நீர் வடிந்த பின்னர் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.
சுப்பிரமணியன் தெரிவித்தார். கடந்த இரு நாட்களாக அதிக அளவில் மழை கொட்டியதால் தென் மாவட்டங்களில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.