12 -வயது சிறுமி கர்ப்பம் . 13 வயது சிறுவன் போக்சோவில் கைது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி.இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுவன் அங்கு சென்று உள்ளார். அவர் அந்தசிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் இது பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் சிறுமி நடந்த சம்பவம் பற்றி சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது சிறுமிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனே சிறுமியை பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றனர் அங்கு சிறுமியை டாக்டர் பரிசோதனை செய்தனர். அதில் அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்இதற்கு யார் காரணம் ?என்று கேட்டனர். அப்போது அந்த சிறுமி தன்னை 13 வயது சிறுவன் பலமுறை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் போக்சோசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 13 வயதுசிறுவனை கைது செய்தனர். அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவையில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.