ரெயிலில் சிக்கி ஒருவர் பலி..

ரெயிலில் சிக்கி ஒருவர் பலி.. கோவை போத்தனூர் – இருகூர் இடையே ரயில் தண்டவாளத்தில் நேற்று ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவருக்கு 45 வயது இருக்கும். இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார்சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் லுங்கி மற்றும் சட்டை அணிந்து உள்ளார் ரெயிலில் அடிபட்டதில் முகம் சிதைந்து காணப்பட்டது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.