கோவை சிறைச்சாலை பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த போக்சோ கைதி இன்று தப்பி ஓட்டம்..!

கோவை சிறைச்சாலை பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த போக்சோ கைதி இன்று தப்பி ஓட்டம்..! நீலகிரி மாவட்டம் கூடலூர் சேர்ந்தவர் விஜயரத்தினம்.இவர் போக்சோ வழக்கில் கைதாகி,தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மத்திய சிறையில் சார்பாக காந்திபுரம் பகுதியில் 2 பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் தண்டனை விதிக்கபட்டசிறை கைதிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் நேற்று இரவு காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள பங்கில் தண்டனை கைதி விஜயரத்தினம் இரவு பணியில் இருந்தார். இன்று காலையில் 5 – 30 மணிக்கு ஷிப்ட் காவலர்கள் பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கையை சோதனை செய்த போது விஜய ரத்தினத்தை காணவில்லை. தப்பி ஓடி விட்டார்.இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.