திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிந்தாமணி அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அம்பலத்தரசு( மாநில தலைவர் தமிழ்நாடு முத்தரையர் சங்கம்) தலைமையில் கா குப்புசாமி எம்ஏபிஎல் வரவேற்புரை ஆற்றினார் பி சுப்பிரமணியன் எம் ஏ மாநில பொருளாளர் கே சிதம்பர பாண்டியன் எம் எம் கருப்பையா கே எம் மனோகரன் வி பி ரவிக்குமார் ஆர் வேல்முருகன் எஸ் வைத்தியலிங்கம் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதிக்கான அரசியலைக் கூறும் தமிழக அரசே தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்துக முத்தரையர் முத்துராஜா பிரிவினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் முத்தரையர் 29 பிரிவுகளையும் உள்ளடக்கி ஒரே தொகுப்பாக உள் ஒதுக்கீடு தர வேண்டும் திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தை உடனே திறந்திடுக வலையர் புனரமைப்பு திருத்தம் செய்து உடனடியாக அமல்படுத்து முத்திரையருக்கு தனி சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அண்ணாமலை முத்துராஜா பேருந்து நிலையம் என பெயரிட்ட அரசாணை உடனே அமல்படுத்து முத்தரையர் வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் தற்போதைய தமிழக வரலாற்றை மாற்றியமைத்து முத்தரையர் வரலாற்றில் பள்ளி கல்லூரி பாடங்களில் இடம் பெறசெய்க தமிழ்நாடு அரசு தேர்வாணைக்குழுவில் முத்தரையருக்கு இடம்படி பல்கலைக்கழகங்களில் முத்தரையர் இடம் அளிக்க வேண்டும் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராக நியமிக்க வேண்டும் மாவட்ட உயர்நீதிமன்ற நீதிபதியாக முத்தரையரை நியமிக்க வேண்டும் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு தந்திடுக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும் போன்ற கண்டன தீர்மானங்களை வாசித்து அவர்கள் கோஷம் எழுப்பினர் நிகழ்வின் முடிவில் கிளியநல்லூர் ராஜேந்திரன் நன்றி உரையாற்றினார் இதில் ஏராளமான தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.