வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி சாமான்கள் திருட்டு..!

கோவை,சிங்காநல்லூர், உப்பிபாளையம் சீனிவாச கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 64) மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்தகடந்த மாதம் 23-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் அருப்புக்கோட்டையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார் .14-ந் தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 கிலோ வெள்ளி சாமான்களை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து குருசாமி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.