காதல் திருமணம் செய்த வாலிபருக்கு கத்திக்குத்து- 3 பேர் கைது..!

கோவை .அருகில் உள்ள தெலுங்கு பாளையம் வேடப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சங்கர், இவரது மகன் சுந்தரமூர்த்தி (வயது 24) நகை தொழில் செய்து வருகிறார் .இவர் கோவை ராஜவீதியில் உள்ள ஒருபேன்சி ஸ்டோரில் வேலை பார்த்து வரும் செல்வபுரத்தை சேர்ந்த திரிஷா என்பவரை காதல் செய்தாராம் .25- 12- 20 22 அன்று திரிஷாவை சென்னைக்கு அழைத்துச் சென்றுதிருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் 5-தேதி இருவரும் கோவைக்கு திரும்பினார்கள். சுந்தரமூர்த்தி திரிஷாவை அவரது வீட்டில் விட்டுவிட்டுவேலைக்கு சென்று விட்டார்”கடந்த 1-ந்தேதி சுந்தரமூர்த்தி தனது நண்பர் ஹரிஹருடன் குடிபோதையில் திரிஷா வீட்டுக்கு சென்றார். சென்னைக்கு வருமாறு அவரை அழைத்தார். அதற்கு திரிஷா தாயார் அவரை அனுப்ப மறுத்து விட்டார்.இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தியும் அவரது நண்பரும் சேர்ந்து திரிஷாவின் தாயாரை தாக்கினார்கள் .அப்போது அங்கு வந்த திரிஷாவின் தம்பி செல்வின் (வயது19) அவரது நண்பர் பிரகாஷ் ( வயது 19)ஆகியோர் சேர்ந்து சுந்தரமூர்த்தியை தாக்கி கத்தியால் குத்தினார்கள் .இதில் அவருக்குபலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார் .இது குறித்து சுந்தரமூர்த்தி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார்வழக்கு பதிவு செய்து செல்வபுரம், சி ஜி வி நகரை சேர்ந்த செல்வின் (வயது 19) சுண்டக்காமுத்தூர் ரோடு சேதுமா வாய்க்காலைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 19) ஆகியோரை கைது செய்தனர் .இவர்கள்மீது கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தாக்கப்பட்ட திரிஷாவின் தாயார்கஸ்தூரி பாலம்மாள்( வயது 37) செல் வபுரம்போலீசில் புகார் செய்தார். அவர் கொடுத்துள்ள புகாரின் பேரில் சுந்தரமூர்த்தி ( வயது 24 )அவரது நண்பர் ஹரிஹரன் (வயது 23) ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் , மிரட்டல் உட்பட 4 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டது இதில் ஹரிகரன் கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுந்தரமூர்த்தி காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.