டிப்பர் லாரி மோதி முதியவர் பரிதாப பலி..

மேட்டுப்பாளையம்  ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள ஓடந்துறை பவானி ஆறு பகுதியில் நேற்று ஒருவர் ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். விசாரணயில் அவர் கரூர் மாவட்டம், வயலூர் பக்கம் உள்ள வாரக்கூரை சேர்ந்த மாலியாளன் (வயது 63)என்பது தெரிய வந்தது. இது குறித்து அவரது மனைவி கருப்பாயி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக குன்னூரைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் அலெக்ஸ் சாண்டர்(வயது 38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..