கோவை மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது..!

கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஜெ.கே. ஜெ. காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கண்ணன் ( வயது 22) இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த  ஒருவரை ஆசை வாரத்தை காட்டி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த கண்ணனை தேடி வந்தனர் . இந்த நிலையில் நேற்று கண்ணனை கருமத்தம்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.