கோவையில் வேகத்தடையில் இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி – பெண் படுகாயம்..

கோவையை அடுத்த சூலூரில் உள்ள நல்ல தண்ணீர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கோமதி ( வயது 65) இவர் நேற்று தாளக்கரையை சேர்ந்த சிங்காரவேலன் மனைவி உஷா (வயது 32) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்து சென்று கொண்டிருந்தார். சுல்தான்பேட்டை பால் கம்பெனி அருகே சென்றபோது அங்குள்ள வேகத்தடையில் இவர்கள் சென்ற வாகனம் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .வழியில் கோமதி பரிதாபமாக இறந்தார். உஷா படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோமதியின் மகன் பிரதாப் சுல்தான் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இருசக்கர வாகனம் ஒட்டி வந்த உஷா (வயது 32) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.