சாலையை கடக்கும் போது அரசு பஸ் மோதி மூதாட்டி பலி..

கோவை அவிநாசி ரோடு லட்சுமி மில் அருகே நேற்று சுமார் 65 வயது தக்க மூதாட்டி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மூதாட்டி யார்? என்று விசாரித்து வருகின்றனர்.