மின் கம்பத்தில் பைக் மோதி வாலிபர் சாவு.

திருப்பூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மகன் குமரேசன் ( வயது 25) இவர் நேற்று கோவை தடாகம் ரோட்டில் காந்தி பார்க் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சென்ட்ரல் மீடியனில் உள்ள மின்கம்பத்தில் பைக் மோதியது.இதில் குமரேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.