காதல் தோல்வி: வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை சாயிபாபா காலனி,.கே. கே புதூரில் உள்ள பூசாரி பழனியப்பன் வீதியை சேர்ந்தவர் அனிபா .இவரது மகன் நவு பல்(வயது 21)இவர் ஆன்லைன் டிரேடிங் செய்து வந்தார்.இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம்.அந்தப் பெண் தற்போது இவரிடம் பழகுவது நிறுத்திவிட்டார்.இதனால் மனம் உடைந்த நவுபல் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.