கோவையில் நடுரோட்டில் பட்டாசு வெடித்த பா.ஜ.க.வினர் மீது வழக்கு .

சட்டசபை தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜகஅமோக வெற்றி பெற்றுள்ளது .இதை கொண்டாடும் வகையில் கோவை,குனியமுத்தூர்,ரைஸ்மில்ரோடு சந்திப்பில் நேற்று பாஜகவினர் திரண்டு நின்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்..அனுமதி பெறாமல் பொது இடத்தில் கூட்டம் கூடியதாகவும், பட்டாசு வெடித்ததாகவும் பாஜகவை சேர்ந்த ஜெகதீஷ், அர்ஜுன், ரமேஷ் உட்பட சிலர் மீதுகுனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.