மின் கம்பத்தில் ஏறி வடமாநில தொழிலாளி தற்கொலை..

கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் பிக்னா மஜ்கி (வயது 47) கோவையில் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று காந்திபுரம் பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் ஒயரை தொட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார். அவர் வைத்திருந்த ஆதார் கார்டை வைத்து அவரை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேஸ்வரி காட்டூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..