ரயில் நிலையம் முன் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

கோவை ரயில் நிலையம் பின்புறம் கேட் அருகே கடந்த 28 ஆம் தேதி ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .இது குறித்து உக்கடம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் சிராஜ் ( வயது 39) என்பது தெரிய வந்தது .இவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . சிகிச்சைபலன் அளிக்காமல் நேற்று மாலை இறந்தார். இது குறித்து டவுன்ஹால் கிராம நிர்வாக அதிகாரி சித்ராதேவி உக்கடம் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.