கோவை கல்லூரி மாணவியிடம் வைர செயின் திருட்டு..!

கோவை :ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் ஸ்ரீஹரினி (வயது 19) இவர் கோவை சுங்கம பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று சுங்கம் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த வைர டாலர் பொருத்தப்பட்ட 2 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டான்.இதுகுறித்து மாணவி ஸ்ரீ ஹரினி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..