கடைகளில் குட்கா விற்பனை- பெண் உள்பட 5 பேர் கைது..!

கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று சுகுணாபுரம் மைல்கல் பஸ் ஸ்டாப் அருகே ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினர் .அங்கு தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக பாஸ்கரன் ( வயது 52) கைது செய்யப்பட்டார்.

இதே போல குளத்துப்பாளையம் பகுதி உள்ள ஒரு மளிகை கடையில் நடந்த சோதனையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக குளத்துப்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதி சேர்ந்த நாகராஜ் மனைவியை ராதிகா ( வயது 38) கைது செய்யப்பட்டார்.

சிங்காநல்லூர்.எஸ்.ஐ.எச். எஸ். காலனி காந்தி ரோட்டில் ஒரு பெட்டிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது நடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சேர்ந்த ராம் பிரகாஷ் (வயது 29) கைது செய்யப்பட்டார்.

சரவணம்பட்டி போலீசார் கணபதி சங்கனூர் ரோட்டில் ஒரு பெட்டி கடையில் நடத்திய சோதனையில் 25 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் கோட்டை வயலை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ( வயது 30)கைது செய்யப்பட்டார்.

சிவானந்தபுரம் பஸ் ஸ்டாப் அருகே ஒரு பெட்டி கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 125 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பெட்டிக்கடை பை நடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த துஷ்மந் நாயக் (வயது 33) கைது செய்யப்பட்டார்..