வடமாநில பெண் 2 குழந்தைகளுடன் திடீர் மாயம்..!

வடமாநில பெண் 2 குழந்தைகளுடன் திடீர் மாயம்..! மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பஷீர் அகமது வயது 31 இவர் கோவை செல்வபுரம் எல்ஐசி காலனியில் குடும்பத்துடன்தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சகானா பாத்( வயது 25 இவர்களுக்கு திருமணம் ஆகி 8ஆண்டுகள் ஆகிறது. சகானாபாத் உசேன் (வயது 4)என்ற மகனும் நூர்காதும் (வயது 2) என்ற மகளும் உள்ளனர் கடந்த 19-ந் தேதி பசீர் அகமது வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை..எங்கோ மாயமாகிவிட்டார். அவரதுசெல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பசீர் அகமது செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர்செல்வராஜ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.