தொழிலதிபர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு… சினிமாவுக்குச் சென்றபோது துணிகரம்..!

தொழிலதிபர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு… சினிமாவுக்குச் சென்றபோது துணிகரம்..! கோவை சிவானந்தபுரம், கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 38) இவர் குரும்பபாளையத்தில்மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இவரது தந்தை வீட்டின் முதல் மாடியில் தூங்கிவிட்டார் .கண்ணனும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு சினிமாக்கு சென்று விட்டனர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது அதில் இருந்த 18 பவுன் நகைகளை காணவில்லை.யாரோவீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடி சென்று விட்டனர்.. இது குறித்து கண்ணன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.