நீயா பட பாணியில்… தன் ஜோடியை கொன்றவரை 7 முறை கடித்து பழிக்கு பழி வாங்கும் பாம்பு… உயிர் பிழைத்ததால் மீண்டும்.. மீண்டும் படையெடுக்கும் அதிசயம் .!!

தமிழில் 1959 ஆம் ஆண்டு கமல் மற்றும் ஸ்ரீபிரியா, விஜயகுமார் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் நீயா.

தன்னுடைய கணவனை கொன்றவகள் 5 பேரை பாம்பு பழிவாங்குவது போன்ற கதை. இதேபோன்று பல திரைப்படங்களில் கூட பாம்பு பழிவாங்கும் கதைகள் கூறப்பட்டுள்ளன.

ஆனால், தற்போது இது போன்று உண்மையான சம்பவம் ஒன்னறு நடந்துள்ளது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ராம்பூர் மாவட்டம் மிர்சாபூர் பகுதியில் எஹ்சான் என்ற பப்லு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டின் அருகே ஒரு இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் எஹ்சான் அந்த ஜோடியில் ஆண் பாம்பை கொன்றுவிட்டார். பெண் பாம்பு உடனே அங்கிருந்து தப்பி எங்கேயோ சென்றுவிட்டது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் வீட்டில் இருந்தபோது வீட்டிற்குள் எப்படியோ வந்த பாம்பு இவரை தீண்டியுள்ளது. இதனால் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்து வீட்டுக்கு வந்தார்.

ஆனால், மறுபடியும் அதே பாம்பு  மீண்டும் அவரை கடித்துவிட்டது. இப்படியே அந்த ஒரே பாம்பு மொத்தம் 7 முறை கடித்துள்ளது. ஆனால், 7 முறையும் அவர் உயிர் தப்பி உள்ளார்.

7 முறை பாம்பு கடித்தால் தான் ஏற்கனவே பாம்பு ஒன்றாக இருக்கும்போது அதில் ஒன்றை மட்டும் கொன்றது தான் இதற்கு காரணம் என்றும், அதுதான் இப்படி வந்து தன்னை பழிவாங்குகிறது என்றும் அப்பகுதியினர் கூறுகின்றனர். பாம்புக்கும் எஹ்சானுக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில், இயற்கையும் இருவருக்குமே துணை நிற்கிறது. ஆனால் மீண்டும் அவரை பாம்பு தீண்டுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.