கோவைக்கு புதிய போலீஸ் ஐ.ஜி-டி.ஐ.ஜி நியமனம்..!

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜியாக பணிபுரிந்து வந்தவர் சுதாகர். இவர் சென்னையில் போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கோவை மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐ.ஜி.யாக பவானிஸ்வரி  நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன் சென்னையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார்.இதே போல கோவை சரக டி.ஐ.ஜி யாக பணிபுரிந்து வந்தவர் விஜயகுமார் இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் அல்லவா அந்த இடம் காலியாக இருந்தது. தற்போது கோவை சரக டி.ஐ.ஜி யாக சரவண சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றினார்.