நள்ளிரவில் ஆள் இருந்த வீட்டில் புகுந்து 25 பவுன் நகை, பணம் கொள்ளை – கோவையில் துணிகரம்..!

கோவை துடியலூர் அருகே உள்ள வெற்றிலை காளி பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 43) தனியார் நிறுவனத்தில் ஊழ்யராக வேலை பார்த்து வருகிறார் .இவர் மனைவி குழந்தைகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார் சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 30 மணியளவில் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென்று புகுந்தார் .அந்த சத்தம் கேட்டு சாமிநாதனின் தாயார் எழுந்தார் .பின்னர் அவர் அறைக்குள் யாரோ மர்ம சாமி ஓடுவதைபார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார் அந்த சத்தம் கேட்டு சாமிநாதன் வெளியே வந்து பார்த்தார். ஆனால் வீட்டுக்குள் யாரும் இல்லை .அதை தொடர்ந்து அவர் அறையில் இருந்த பீரோவை பார்த்தபோது அது பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் அனைவரும் மீண்டும் தூங்க சென்றனர் .மறுநாள் காலையில் சாமிநாதன் பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த 25 பவுன்தங்க நகைகள் மற்றும் பணம் ரூ 45, ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனால்அதிர்ச்சி அடைந்தசாமிநாதன் துடியலூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள். ஆள் இருக்கும் வீட்டில்மர்ம ஆசாமிகள் புகுந்து கைவரிசை காட்டியதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்..