புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை..

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர்,பேச்சிமுத்து பிள்ளை வீதியை சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மகன் கதிர்வேல் (வயது 26) இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் விட்டத்தில் துண்டை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது தாயார் மாலதி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..