கோவை அருகே சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

கோவை அருகே சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. கோவை துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம்,கதிரி நாயக்கன் பாளையத்தில் மத்திய ஆயுதப் படை ( சி.ஆர்.பி.எப்). பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு சி.ஆர்.பி.எப். வீரராக பணிபுரிந்து வந்தவர் ஜெகன் (வயது 32) இவரதுதந்தை பெயர் குணசேகரன். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆசிர்வாதபுரம், பெருமாள் குளம் :.இவர்கடந்த 2011 ஆம் ஆண்டுமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்) பணியில் சேர்ந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த இவர் கடந்த மார்ச் மாதம் கோவை துடியலூர் அருகே உள்ள சி.ஆர் பி.எப். பயிற்சி கல்லூரியில் பணி அமர்த்தப்பட்டார். இந்த நிலையில் இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் பணியில் இருந்தார் அப்போது திடீரென்று பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டார். இதில் 2 தோட்டாக்கள் அவரது கழுத்தில் பாய்ந்து வெளியேறியது .இதனால் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரின் உடல் மீட்க பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜெகன் கடந்த 3 மாதங்களுக்கு முன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. முன்னதாக அவர் தற்கொலை செய்யும் முன் தனது பெற்றோர் மற்றும் மூத்த அண்ணனுக்கு வாட்ஸ்அப்மூலம் தகவல் அளித்துள்ளார் .அதில் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுமாறும், தற்கொலை செல்வதற்கு மன்னித்துகொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்..இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.