கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை- 3 பேர் கைது..!

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 39) இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தாராம். இவரை சாய்பாபா காலனி போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 12 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக நரசிம்மபுரம் அம்மன் காரணி சேர்ந்த சம்பத்குமார் (வயது 40) பிரபு (வயது 40 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.