வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் மர்ம நபர்கள்… குடியிருப்பவர்கள் மீது பீர் பாட்டில் தாக்குதல் – உரிமையாளர் மீது புகார்..!

கோவை பீளமேடு அடுத்த நேரு நகர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரின் மனைவி சரஸ்வதி (33). இவருக்கு சொந்த ஊர் தர்மபுரி. சரஸ்வதி அவரது கணவர் செந்தில்குமாரும் கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகின்றனர். இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் சுடலைக்கண்ணு (42) என்பவர் வீட்டின் உரிமையாளர் ராமசாமியிடம் சரஸ்வதியின் வீட்டிற்கு அடிக்கடி மர்ம நபர்கள் வந்து செல்வதாக கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் ராமசாமி சரஸ்வதியை செல்போன் மூலம் அழைத்து வீட்டிற்கு வந்து செல்லும் நபர்கள் குறித்து விசாரித்துள்ளார். அப்போது சரஸ்வதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் சரஸ்வதி மற்றும் அவரது கணவர் செந்தில்குமார் அவரது மகன் ஆகியோர் சுடலைக்கண்ணு வீட்டிற்கு சென்று இது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சுடலை கண்ணு வீட்டில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து சரஸ்வதி மற்றும் அவரது கணவர் தலையில் அடித்தார். இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்து ஓடியது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் சுடலை கண்ணு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.