கோவையில் பாரதிய ஜனதா கட்சி மண்டல தலைவர் கடையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவையில் பாரதிய ஜனதா கட்சி மண்டல தலைவர் கடையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை காந்திபுரம் 1 வது வீதி அருகே வேணி ட்ரேடர்ஸ் கடையை நடத்தி வருபவர் பாரதிய ஜனதா கட்சி ரத்தினபுரி மண்டல் தலைவர் மோகன். இவரது கடைக்கு இன்று காலை 9.30 மணி அளவில் மர்ம நபர்கள் கடையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். இவரது மகன் மகேந்திரன் இன்று காலை வந்து பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மோகன் கூறும் போது:- கடந்த 2016 ஆம் ஆண்டும், அதே போல 2018 ஆம் ஆண்டு எனது கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அந்த சாலையின் அருகே உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.