5 நிமிடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்: சி.சி.டி.வி காட்சிகளை வைத்து தேடி வரும் காவல் துறை

5 நிமிடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்: சி.சி.டி.வி காட்சிகளை வைத்து தேடி வரும் காவல் துறை….

கோவை அரசூர் பகுதியைச் சார்ந்த விஷ்ணுவர்தன் .தனியார் நிறுவன ஊழியரான இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒண்டிப்புதூர் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று இருக்கின்றார்.

ஜெராக்ஸ் எடுத்து விட்டு திரும்பி வந்து பார்த்தார். இருசக்கர வாகனம் காணாமல் போய் இருந்தது. இருசக்கர வாகனம் நிறுத்தி சென்ற 5 நிமிடத்திற்கு உள்ளாக காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்

இருசக்கர வாகனம் திருடு போன போது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.