குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சுடிதார் அணிந்து வந்து செருப்பு திருடும் மர்ம ஆசாமி: கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சி….

குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சுடிதார் அணிந்து வந்து செருப்பு திருடும் மர்ம ஆசாமி: கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சி….

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டு வாசல்களில் விடப்படும் செருப்புகள் அண்மைக்காலமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து செருப்புகள் காணாமல் போனதால் அப்பகுதியை மக்கள் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் கடந்த 2 ம் தேதி இரவு பதிவான காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவு நேரத்தில் சுடிதார் அணிந்து வரும் மர்ம ஆசாமி ஒருவர் வீட்டு வாசலில் உள்ள செருப்புகளை எடுத்துச் செல்வதும், கண்காணிப்பு கேமராவை கண்டதும் முகத்தை மறைத்து செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.

 

இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்ம அசாமி யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.