கள்ளக்காதலை முறித்து கொண்டதால் ஆத்திரம் இளம்பெண்ணை அடித்து உதைத்த வாலிபர் மீது புகார்..!

கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். திருமணமான இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்த நகை தொழிலாளி பிரபு(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்நிலையில், பிரபு தனக்கு திருமணமானதை மறைத்து தன்னுடன் பழகி வருவது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இது குறித்து இளம்பெண் பிரபுவிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த இளம்பெண், பிரபு உடனான பழக்கத்தை தொடர விரும்பாமல் விலகி செல்ல முயன்றார். பேசுவதையும் நிறுத்தி கொண்டார். ஆனால் பிரபு இளம்பெண்ணை தொடர்ந்து பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இளம்பெண் கோவை ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த பிரபு, இளம்பெண்ணுடன் தன்னுடன் ஏன் பழகுவதை நிறுத்தி கொண்டாய்? என கேட்டு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரபு தகாத வார்த்தைகளால் திட்டி இளம்பெண்ணை அடித்து உதைத்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சண்டையை விலக்கி விட்டனர். பின்னர் பிரபு அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து இளம்பெண் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.