2 குழந்தைகளுடன் இளம் தாய் திடீர் மாயம்..!

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, தியாகி குமரன் நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் , இவரது மனைவி குஷ்பூ (வயது 26) இவர்களுக்கு கோமதி ( வயது 9) சுகன்யா ( வயது 7 )ஆகிய இரு மகள்கள் உள்ளனர் .கடந்த 19ஆம் தேதி குஷ்பூ தனது சொந்த ஊரான விராலிபட்டிக்கு தனது இரு மகள்களுடன் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து கணவர் பரமேஸ்வரன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..