வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை..!

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள விஸ்வேஸ்வர நகரை சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகன் சஜித் (வயது 40) இவர் கடந்த 18ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஒரு சாவியை அவரது தந்தை சுரேந்திரிடம் கொடுத்துவிட்டு சொந்த ஊரான பாலக்காடு சென்று விட்டார்.நேற்று திரும்பி வந்தார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்ற பார்த்தபோது பீரோவில் இருந்து 7 பவுன் தங்க நகைகள், பணம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சஜித், பீளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்