4 பெண் குழந்தைகளின் தாய்… 2½ வயது குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம்-கணவர் புகார்..!

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் அவர் தனது கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் மாலையில் அவர் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டில் தனது மனைவி மற்றும் 2½ வயது பெண் குழந்தை மாயமாய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்களை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். அப்போது இளம்பெண் தனது 2½ வயது குழந்தையுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இது குறித்து இளம் பெண்ணின் கணவர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் வாலிபருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்னை தேடி வருகின்றனர்.