தாய், மகன் திடீர் மாயம்.!!

கோவை அருகே உள்ள வடவள்ளி,மாளிகை வீதி, வேம்பு அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். காய்கறி வியாபாரி. இவரது மனைவி சாவித்திரி ( வயது 46) கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சாவித்திரி தனது மகன் ஹரிஹரனுடன் ( வயது 15) கடந்த 6-ந் தேதி வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து கணேசன் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

இதேபோல குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் உள்ள திருமாங்கல்ய கார்டனை சேர்ந்தவர் அமானுல்லா. இவரது மனைவி பாஷிலா (வயது 30) இவர் நேற்று தனது 10 வயது மகன் முஹம்மது ஆபே சுடன் எங்கோ மாயமாகி விட்டார் .இது குறித்து அமானுல்லா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து தாய் – மகனைதேடி வருகிறார்.