பூ வாங்குவது போல் நடித்து மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை..!

கோவை ராமநாதபுரம், மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு. இவரது மனைவி இந்திராணி ( வயது 61) இவர் ராமநாதபுரம் மருதூர், தபால் அலுவலகம் எதிர்ப்புறம் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் பூ வாங்குவது போல ஒரு வாலிபர் வந்தார். பூக்களின் விலை என்ன ?என்று கேட்டுக் கொண்டிருந்தார்..திடீரென்று இந்திராணி கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு சற்று தூரத்தில் பைக்கில் நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமியுடன் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து இந்திராணி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பிய 2 ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.