ஆற்றில் மூழ்கி தாய், மகன் பரிதாப பலி – வால்பாறையில் சோகம்..

கோவை மாவட்டம் வால்பாறை சீடல் டேம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முனிய செல்வி ( வயது 30 ) இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. சுஜித்( வயது 7)என்ற மகனும் தீபிகா (வயது 4 என்ற)மகளும் உள்ளனர்.நேற்று முனிய செல்வி துணிகளை துவைப்பதற்காக அங்குள்ள சீடர் டேம், சென்னியப்ப எஸ்டேட் ஆற்றுக்கு சென்றார். துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது சுஜித் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று சுஜித் தண்ணீரில் விழுந்து விட்டார். மகனை காப்பாற்றுவதற்காக முனியசெல்வியும் ஆற்றில் குதித்தார். நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கி இறநதனர். இது குறித்து ஷேக்கல் முடி போலீசில் புகார் செய்யப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் முருகையா சம்பப இடத்துக்கு சென்று பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.