கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் கத்தி முனையில் 4 பவுன் செயின் பறிப்பு- பெண் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை..!

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஓணாம்பாளையம், ராசிகார்டனை சேர்ந்தவர் காரைக்கவுடர் .இவரது மனைவி பாக்கியவதி ( வயது 63) இவர் நேற்று மாலையில் கோவிலுக்கு செல்வதற்காக வைசியாள் வீதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் பாக்கியவதியிடம் உக்கடத்திற்கு எப்படி செல்ல வேண்டும்? என்று வழி கேட்டனர். அப்போது அருகில் இருந்த 2ஆண்கள் பாக்கியவதியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.நாங்கள் 4 பேரும் இந்த இடத்தை விட்டு போகும் வரை சத்தம் போடக்கூடாது .சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து பாக்கியவதி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் வழக்கு பதிவு செய்து பெண்கள் உள்பட 4 பேரை தேடி வருகிறார்.