கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை உதவி ஆய்வாளர் திலக் தமிழக அரசின் அண்ணா விருதுக்கு தேர்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்
தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசின் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம்

அந்த வகையில் நடப்பாண்டில் கோவை மாவட்ட காவல் துறையில் SB CID உதவி ஆய்வாளராக பணிபுரித்து வரும்
திலக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இவர் பல வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு வருவதால் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் அண்ணா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இவருக்கு அண்ணா விருதும் பதக்கமும் பத்தாயிரம் ரூபாய் வெகுமதியும் வழங்கப்படும்
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இவரை காவல்துறை அதிகாரிகள் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் பாராட்டியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்
இவர் ஏற்கனவே கோவை மாவட்டத்தில் சிறந்த காவலர்களுக்கான விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது