மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24-ம் ஆண்டு துவக்க விழா..!

மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் விவசாயிகள் மற்றும் பொது மக்களை ஒருங்கிணைந்து நட்புடன் உழவு சந்தை செயல் படவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களும் வர்த்தக ரீதியாக நன்மை அடையவும், வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் காய்கறிகள் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

24ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ‌ உழவர் சந்தை ‌நிர்வாக அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன்,
நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு , நகர மன்ற உறுப்பினர் ஓ,கே,ஆர் .நடராஜன், திமுக தெற்கு நகரச் செயலாளர், முனுசாமி ஆகியோர் பங்கு பெற்றனர்.

உழவர் சந்தை நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் கூறுகையில் விழா சிறப்பானதாக அமைந்ததாகவும் விழாவில் எங்களுக்கு கொடுத்த காய்கறி பரிசு தொகுப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்..