மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் பங்காரு அடிகளார் 82-வது பிறந்தநாள் விழா- சித்தர் பீடத்தில் கொண்டாட்டம்.!!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் 82வது பிறந்தநாள் விழா பிப்ரவரி 28ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்றது.

இருபத்தி எட்டாம் தேதி திங்கட்கிழமை அன்று காலை மங்கள இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சித்தர்பீடம் வந்த ஆன்மிககுரு பங்காரு அடிகளாருக்கு சேலம், நாமக்கல் மாவட்ட ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் வரவேற்று பாதபூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர்களின் பொது பாதபூஜை நடைபெற்றது.

மாலை 4 மணியளவில் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.

மார்ச் 1-ஆம் தேதி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சித்தர்பீடம் வந்த பங்காரு அடிகளாரை பக்தர்கள் வெள்ளி ரதத்தில் அழைத்து வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் பொது பாதபூஜை செய்தனர். அன்று மாலை ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

மார்ச் 2-ஆம் தேதி காலை மூன்று மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிடேகத்துடன் தொடங்கிய விழாவில் அன்னதானத்தை வழக்கறிஞர் அகத்தியன் தொடங்கி வைத்தார். ஆன்மிககுரு பங்காரு அடிகளாரை விழுப்புரம், கடலூர் மாவட்ட பக்தர்கள் தங்கரதத்தில் அழைத்து வந்தனர். அன்று மாலை ரூபாய் 3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சித்தர்பீட வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு விழாப்பேருரையாற்றி ஆன்மிககுரு பங்காரு அடிகளார் முன்னிலையில் விழா மலரை வெளியிட லட்சுமி பங்காரு அடிகளார் பெற்றுக்கொண்டார். ரூபாய் 3 கோடி மதிப்பிலான லேப்டாப், ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், கல்வி உதவித்தொகை, ஏழை எளியவர்களுக்கு தொழில் செய்ய நிதி உதவி, வீடுகள், இஸ்திரி பெட்டி, சைக்கிள், மரக்கன்றுகள், அரிசி உள்ளிட்ட பொருட்களை ஆன்மிககுரு பங்காரு அடிகளார் 3000 ஏழை எளியவர்களுக்கு வழங்கினார்.மார்ச் 3-ஆம் தேதி வியாழக்கிழமை காலை கோலாகலமாக சித்தர் பீடத்தில் மங்கள இசையுடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விடியற்காலை 3 மணி அளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 9 மணி அளவில் ஆன்மிககுரு பங்காரு அடிகளாரை செவ்வாடை பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்களும், வெளிநாடு வாழ் செவ்வாடை பக்தர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மேலும் சித்தர்பீடம் வந்த பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தார். இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பங்காரு அடிகளார் பிறந்த நாள் கேக்கினை பேரக்குழந்தைகள் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பங்காரு அடிகளார் ஆசி வழங்கினார். இதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், செய்யூர் எம்.எல்.ஏ. பனையூர் பாபு, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தலைவர் ஒய்வு பெற்ற நீதிபதி திரு.கே.பாஸ்கரன், ஒய்வு பெற்ற தென்னக ரயில்வே பொது மேலாளர் திரு.ஜெயந்த், ஓய்வு பெற்ற நீதிபதிகள் திரு.இராஜேஸ்வரன், திரு.முருகேசன், இசை அமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், ஆன்மிக இயக்க பொறுப்பாளர்களும், செவ்வாடை பக்தர்களும், பொது மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ், கல்வி நிலையங்களின் தாளாளர் உமாதேவி ஜெய்கணேஷ், தொழிலதிபர் ஜெய்கணேஷ், வழக்கறிஞர் அகத்தியன், ஆஷா அன்பழகன், டாக்டர் ஸ்ரீலேகா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.