கோவையில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் போராட்டம்..!

கோவை: மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தன்னார்வலர்களை முழு நேர ஊழியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும், ஊழியர் வங்கி கணக்கில் ஊதியத்தை செலுத்த வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு 1 மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்..