கோவை ஓட்டலுக்கு சாப்பிட சென்ற பெண் மானபங்கம்- சப்ளையர் கைது..!

கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள குரும்பபாளையம் ரோட்டில் தனியார் சொந்தமான ஒட்டல் உள்ளது.இங்கு திருவாரூர் மாவட்டம் ,நன்னிலம் பக்கம் உள்ள செம்பிய நல்லூரை சேர்ந்த சுதாகர் மகன் யோகேஷ் ( வயது 18 )என்பவர் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்த ஓட்டலுக்கு ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 49) என்பவர் தனது மகளுடன் சாப்பிட சென்றார்.அப்போது சப்ளையர் யோகேஷ் ராஜேஸ்வரியை மானபங்கம் செய்தாராம்.இதை தட்டி கேட்ட ராஜேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து கோவில்பாளையம் போலீசில் ராஜேஸ்வரி புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து சப்ளையர் யோகேசை நேற்று கைது செய்தனர் .இவர் மீது மானபங்கம் ,கொலை மிரட்டல்,பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.